மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் சொல்லேனும் சொல்

Welcome to our website

செந்தமிழே ! நறுந்தேனே !

செயலினை மூச்சினை  உனக்களித்தேனே !
நைந்தாயெனில்  நைந்துபோகும்  என் வாழ்வு  
நன்னிலை உனக்கெனில் எனக்குதானே !
 
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வாராப்பூர்  என்பது தலைமைநாடு.இந்நாட்டிற்கு  வாரை வளநாடு என்ற வழக்குப்பெயரும் ஒன்று உண்டு .பிற்காலத்தில் இன்றுவரையிலும் வாராப்பூர் என்ற பெயரே வழங்கப்பட்டு வருகிறது .

.

வாராப்பூர் புலவன்காட்டில் இருந்து புலவர்கள் வந்து இந்த காட்டில் தங்கி இருந்த காரணத்தினால் இவ்வூருக்கும் அதே பெயர் ஆனது .
புலவன்காடு ! ஆம் புலவன்காடு ! புலவர் முதற்குடியாய் பொன் அடி பதித்ததினால் புலவன்காடு என்னும் பூத்த பெயர் தன்னை புவி அறிய புகல்கின்றோமே !
அகமும் புறமும் அருந்தமிழர் இரு கண்கள் ! அகத்தை பாடி வரும் புலவர்களுள் புலவர் இருவருக்குள் போட்டியிட்டு கவி எழுதும் போட்டி ஒன்று நடந்ததுவாம். இருவருக்கும் வேறுபாடு இதனால் எழுந்ததுவாம். அண்ணன் தம்பிகள் தான் அவர்கள் இருவருமே! ஏற்பட்ட வேறுபாட்டால் இளம்புலவன் மனம் வெதும்பி இல்லறத்தாள் கைப்பற்றி  ஏழு என்றான்; எழுந்தான் ;அடுத்த கையில் [பசு] ஒன்றை பற்றி அடியெடுத்து நடந்தானாம்.
.இல்லறத்தை தொடக்கி ,
அகவை முதிர்ச்சியிலே அப்புலவன் அமரர் ஆக புலவர் பெயராலே புலவன்காடு பூத்தது எனும் புகழ்மிக்க செய்தி 

.

 

 

Tags

  1. school

News

இயற்கை சூழல்

05/08/2011 08:48
மேற்கில் பேச்சிக்காடும் தெற்கி ல் பட்டையன் காடும் , கிழக்கில் ஒரு பட்டையன்...
>>

சிறப்பு

05/08/2011 08:47
புலவன்காடு, உறந்தைராயன் குடிக்காடு , தெலுங்கன் குடிக்காடு ,பாளாம்புத்தூர் குடிக்காடு , பொய்யுண்டார் குடிக்காடு இப்படி பல வனம் சூழப்பட்ட பகுதி.  
>>

Search site

suresh© 2011 All rights reserved.

Build a personal website